செய்திகள் :

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

post image

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளனர். ஆனால், எங்குமே வேலை கிடைக்காத நிலையில் புஷ்பா ரயில்வே சந்திப்பு அருகே அப்பெண்ணும், அவருடைய கணவரும் குழந்தையுடன் நின்றுள்ளனர்.

இதை நோட்டமிட்ட பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நதிம் (24), முகமது டேனிஸ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தங்களின் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை எனக் கூறி, லட்சுமி நகர்ப் பகுதியில் உள்ள அவர்கள் தங்கியிருந்த அறைக்குப் பெண், கணவர் மற்றும் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.

இரவு தங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்த மூவரும், அவர்களுக்கு உணவும் வாங்கித் தந்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில், அப்பெண்ணை முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதைத் தடுத்த அப்பெண்ணின் கணவரை மூவரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கி கட்டிப் போட்டுள்ளனர்.

கைது

பின்னர், அவர்களின் 3 வயதுக் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, பெண்ணை மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து வெளியேறிய அக்குடும்பத்தினர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலை தேடி வந்த பெண்ணின் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

Ranveer Allahbadia: ``இவர் மூளையில் அழுக்கு..." - யூடியூபரை விளாசிய உச்ச நீதிமன்றம்!

India's Got Latent Show என்ற யூடியூப் நிகழ்ச்சியில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா செய்த சர்ச்சைக்குரிய நகைச்சுவை குறித்த பல்வேறு வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. சமய் ரெய்னா என்ற ... மேலும் பார்க்க

` வழக்கறிஞர் மீது தாக்குதல்' -திமுக அலுவலம், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார்43. இவர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். திண்டுக்கல் திமுக அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இவரின் மகளை அழைக்க டூவிலரி... மேலும் பார்க்க