செய்திகள் :

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

post image

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த சுலைமான் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1.50 கிலோ கிராம் தங்க நகைகள், 50 கேரட் வைர நகைகள், 10 லட்சம் ரூபாய், லேப்டாப், ஐபோன், 3 விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தன. இதையடுத்து சுலைமான், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குபதிந்து சி.சி.டி.வி கேமராக்கள், செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

நகைகள்

இந்த நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பரேயர் (31) என்பவர், சுலைமான் வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார். திருட்டு சம்பவம் நடந்த பிறகு சந்திர பரேயரும் மாயமாகியிருந்தார். அதனால் அவர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அதனால் சந்திரபரேயரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சந்திர பரேயர், தன்னுடைய உறவினர்களை நேபாளத்திலிருந்து சென்னைக்கு வரவழைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்ததோடு 14.3 கிராம் எடையுள்ள தங்க நகைகளை மீட்டனர் . மீதமுள்ள நகைகள், வைர நகைகள் சந்திர பரேயரின் கூட்டாளிகளிடம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் நேபாளத்தில் முகாமிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``சுலைமான் சென்னையில் பிசினஸ் செய்து வருகிறார். தொழிலதிபரான சுலைமான், குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்றிருக்கிறார். இவரின் வீட்டில் அண்மையில் நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பரேயர் டிரைவராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். வேலைக்கு சேர்ந்து சில தினங்கள் ஆனதால் சொந்த ஊருக்கு அவரை சுலைமான் அழைத்துச் செல்லவில்லை. அதனால் சந்திர பரேயரும் தானும் சொந்த மாநிலத்துக்கு செல்வதாக தொழிலதிபர் சுலைமானிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் தன்னுடைய உறவினர்கள் ,கூட்டாளிகளை சென்னைக்கு வரவழைத்து வீட்டின் பூட்டை உடைத்து திருடியிருக்கிறார். கைது செய்யப்பட்ட சந்திர பரேயர், ஏற்கெனவே ஒரு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க