செய்திகள் :

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

post image

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த வீடுகளை பெற ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.

1989-94ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவும், அவரது சகோதரர் விஜயும் சேர்ந்து தாங்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்று கூறி அரசாங்கத்திடமிருந்து மலிவு விலை வீடுகளை வாங்கினர். அவர்கள் தங்களது ஆண்டு வருமானம் 30 ஆயிரம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதற்காக அவர்கள் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

உண்மையில் அவர்கள் இருவரும் அப்போது கூட்டுறவு தொழிற்சாலை ஒன்றில் உறுப்பினர்களாகவும், 25 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் போலி ஆவணங்களை தாக்கல் செய்து அரசாங்கத்தை ஏமாற்றி மலிவு விலை வீட்டை வாங்கியதாக கூறி புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து 1995ம் ஆண்டு இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை கடந்த 30 ஆண்டுகளாக நாசிக் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரூபாலி, குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்கள் இரண்டு பேருக்கும் அரசாங்கத்தை ஏமாற்றி வீடு வாங்கியதற்காக 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பு

இரண்டு பேரும் ஏழைகள் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இரண்டு பேரும் ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய சொத்தை ஏழைகளிடமிருந்து பறித்து இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதோடு இருவருக்கும் ஒதுக்கப்பட்ட வீட்டை ரத்து செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு பேரும் மேல் முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்கும் கோர்ட் ஜாமீன் வழங்கியது. மாணிக்ராவ் தற்போது அமைச்சராக இருக்கிறார். அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் சட்டப்படி அவரது எம்.எல்.ஏ.பதவி பறிபோகும்.

இதற்கு முந்தைய காலக்கட்டங்களில் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ., எம்.பி பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மாணிக்ராவ் ,30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் உள்நோக்கத்தோடு இவ்வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை. அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்'' என்று தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க