செய்திகள் :

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

post image

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார்.

தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட்டு ஜோதிட சடங்குகள், பூஜைகள் போன்ற காரணங்களுக்காக பணத்தை வாரி இரைத்துள்ளார்.

பெங்களூரு எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியில் வசிக்கும் அந்த பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் ஏப்படி ஏமாற்றப்பட்டார் என்பதை எடுத்துரைக்கும்விதமாக புகார் ஒன்றை காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜனவரி 5ம் தேதி அந்த பெண், spl no 1 indian astrologer என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்துள்ளார். ஒரு அகோரியின் படத்துடன் ஜோதிட நிபுணர் என அதில் போடப்பட்டிருக்கிறது. தனது வருங்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அந்த கணக்குக்கு மெஸ்ஸேஜ் செய்துள்ளார். அப்போது விஜயமார் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் இவருடன் பேசியுள்ளார்.

வாட்ஸப்பில் தனது விவரங்களைப் பகிர்ந்துள்ளார் அந்த பெண். மறுமுனையிலிருந்து, அவருக்கு காதல் திருமணம் நடைபெறும் என்றும், ஆனால் ஜாதகப்படி அதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அந்த ஜாதக சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு பூஜைகள் செய்வதாக கட்டணம் வசூலித்துள்ளார். முதன்முதலாக 1,820 ரூபாய் அனுப்பும்போது அது சிறிய தொகையாக தோன்றியதால் எந்த தயக்கமும் இல்லாமல் அனுப்பியுள்ளார்.

சைபர் க்ரைம்

ஆனால் அது வெறும் தொடக்கம்தான். சில காலத்தில் விஜயகுமார், அந்த பெண்ணின் வருங்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க பல பூஜைகள் செய்ய வேண்டும் என்றுக் கூறி பல கட்டணங்களை வசூல் செய்துள்ளார். இதில் தான் ஏமாற்றப்படுகிறோமோ என பிரியாவுக்கு சந்தேகம் வந்தபோது அவர் கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் அனுப்பியிருந்திருக்கிறார்.

அந்த பெண், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனது பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். அவருக்கு 13,000 அளித்த அந்த நபர், இனி மீதமுள்ள பணத்தைக் கேட்டால் அவரது பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார் விஜயகுமார்.

அதைத் தொடர்ந்து ப்ரசாந்த் என்ற நபர் அந்த பெண்ணுக்கு போன் செய்துள்ளார். தன்னை வழக்கறிஞர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக குமார் தற்கொலை செய்யும் நிலையில் இருக்கிறார் என பயமுறுத்தியுள்ளார்.

இந்த நேரத்தில் ஏதோ பெரிய திருட்டில் அகப்பட்டிருப்பதாக அந்த பெண் உணர்ந்து, காவல்துறையை நாடியுள்ளார். இது சைபர் க்ரிமினல்களின் வேலையாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். உண்மையான ஜோதிடருக்கோ, வழக்கறிஞருக்கோ இதில் தொடர்பு இருக்காது என்றும் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது போன்ற திருட்டுகளில் யாரும் சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க