செய்திகள் :

20 ஆண்டுகள்... ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

post image

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளனர். மநகராட்சி நிர்வாகம் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் சொத்து வரி செலுத்தவில்லை. இதையடுத்து, கடந்த சில நாட்களாக மாநகராட்சி அலுவலர்கள் வணிக வளாக நிர்வாகத்திடம், 20 ஆண்டுகளாக செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.47 லட்சம் உள்ளது. அந்த பணத்தை செலுத்தாமல் உள்ளீர்கள். உடனே கட்டுங்கள் என்றனர். மேலும் அதற்கான நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

வணிக வளாகம் முன்பு குப்பை வண்டி

ஆனால் அதன் பிறகும் வரியை செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தினர், வணிக வளாகத்தின் ஒரு நுழைவு வாயிலில் யாரும் செல்ல முடியாத வகையில் குப்பை வண்டியை நிறுத்தினர். மற்றொரு வாயிலில் குப்பையை கொட்டினர். இதனால் வணிக வளாகத்துக்கு உள்ளே செல்ல முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர். குப்பையை பார்த்து அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்கள் முகம் சுளித்தனர். பின்னர் வணிக வளாகத்தினர் உடனடியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினர். இதைத் தொடர்ந்து வணிக வளாகம் முன்பு நிறுத்தப்பட்ட குப்பை வண்டியும், குப்பையும் அகற்றப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, ``தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொத்து வரியை நீண்ட காலம் செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் சொத்து வரி செலுத்தாமல் இருப்பது தெரிகிறது. இந்த வரியை வசூலிக்க நிர்வாகம் உத்தரவை வழங்கியுள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர். சீனிவாசன் பிள்ளை சாலையில் உள்ள வணிக வளாகத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை.

நுழைவு வாயிலில் கொட்டப்பட்டுள்ள குப்பை

கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி அலுவலர்கள் வரியை வசூலிக்க நடையாய் நடந்தாலும், அவர்களிடம் வரி வசூலிக்க முடியவில்லை. இதையடுத்து தான் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டது" என்று தெரிவித்தனர். இனி லட்சக்கணக்கில் வரி செலுத்தாமல் இருக்கும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைக்கு இதே பாணியில் வரி வசூலிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க

CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம்

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக, மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிர... மேலும் பார்க்க

Veena Reddy: USAID நிதியை நிறுத்திய ட்ரம்ப்... பாஜக எம்.பி குறிப்பிட்ட வீணா ரெட்டி; யார் இவர்?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா USAID மூலம் நிதியுதவி செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. 1950 களில் இந்தியாவின் வாக்களிப்போர் சதவிகிதம் சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அதனால், இந்தியாவி... மேலும் பார்க்க