செய்திகள் :

IND vs PAK: "இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன?

post image

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெற்று வருகிறது. A பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா (2), நியூசிலாந்து (1) ஆகிய அணிகளும், B பிரிவில், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா (2), தென்னப்பிரிக்கா (1) ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில், தொடரின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

Icc Champions Trophy

இதனால், நாளை இந்தியாவுடன் மோதும் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது பாகிஸ்தான். இத்தகைய சூழலில், இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என முன்னாள் இந்தியப் பந்துவீச்சாளர் அதுல் வாஸ்ஸன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நாளைய போட்டி குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அதுல் வாஸ்ஸன், ``என்னைப் பொறுத்தவரைப் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும். ஏனெனில் அப்போதுதான் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது பாகிஸ்தானை நீங்கள் வெற்றிபெற விடவில்லையென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்... இதுவே பாகிஸ்தான் வென்றால் அது போட்டியாக மாறும். ஒரு சமமான போட்டி இருக்க வேண்டும்." என்று விளக்கினார்.

அதுல் வாஸ்ஸன்

மேலும், இந்திய அணி குறித்துப் பேசிய அதுல் வாஸ்ஸன், ``உங்களிடம் நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். கில், ரோஹித், கோலி முதல் அக்சர் படேல் வரை எட்டாவது விக்கெட் வரை பேட்டிங் இருக்கிறது. அதோடு, ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை ரோஹித் தேர்ந்தெடுத்திருக்கிறார். துபாய்க்கு இது சிறந்த அணி. உங்களிடம் இருப்பதை நம்பி முன்னேறுங்கள்." என்று கூறினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும், 9 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் அதுல் வாஸ்ஸன் மொத்தமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Champions Trophy: பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம் - குழம்பிய ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் லாகூரில் நடந்து வரும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் தவறாக ஒலிக்க விடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.Pakistan by mistakenly played Indi... மேலும் பார்க்க

Dhoni: "சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றுவிட்டதால் இனி அதைக் கூற முடியாது..." - தோனி கூறுவதென்ன?

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், பெங்களூரும் மோதுகின்றன. சென்னை அணி தனது முதல் இரு போட்டியில் மும்பை மற்றும் ... மேலும் பார்க்க

SA vs AFG: பௌலிங்கில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்; எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 315 ரன்களை எடுத்திருந்தது. தென்னாப்... மேலும் பார்க்க

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவு... மேலும் பார்க்க

Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்

தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ... மேலும் பார்க்க

Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!

சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியத... மேலும் பார்க்க