செய்திகள் :

Dhoni: "சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றுவிட்டதால் இனி அதைக் கூற முடியாது..." - தோனி கூறுவதென்ன?

post image

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், பெங்களூரும் மோதுகின்றன. சென்னை அணி தனது முதல் இரு போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுடன் சேப்பாக்கத்தில் மோதுகிறது.

மறுபக்கம், தன்னுடைய கடைசி ஐ.பி.எல் போட்டி சென்னையில்தான் என்று முன்பே கூறிவிட்டதால், கடந்த நான்காண்டுகளாக ஐ.பி.எல் போட்டிகளிலிருந்தும் திடீரென ஓய்வை அறிவித்துவிடுவாரோ என்ற சஸ்பென்ஸ்க்கு மத்தியில் ரசிகர்கள், தோனி விளையாடும் ஒவ்வொரு ஐ.பி.எல் போட்டியிலும் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.

தோனி

கடந்த இரு சீசன்களாக முழங்கால் மூட்டு வலியுடன் விளையாடி வரும் தோனி, இன்னும் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக ஐ.பி.எல் விளையாட விரும்புவதாகக் கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று மும்பையில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, ஐ.பி.எல்லில் விளையாடுவது குறித்துப் பேசியிருக்கிறார்.

அதில், ``வருடத்துக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறேன். அதை, அனுபவித்து மகிழ்வாக விளையாட விரும்புகிறேன். அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைக்கிறது. ஆனால், அதற்காக 6 முதல் 8 மாதங்கள் நான் கடினமாக உழைக்க வேண்டும். ஏனெனில், ஐ.பி.எல் மிகவும் கடினமான போட்டிகளில் ஒன்று. இங்கு யாரும் உங்களின் வயதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எத்தகைய போட்டியில் விளையாடுகிறீர்களோ, அத்தகைய நிலையில் நீங்கள் இருக்க வேண்டும்." என்று தோனி கூறினார்.

தோனி

மேலும், தொடர்ந்து பேசிய தோனி, ``நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே ஒரே எண்ணமாக இருந்தது. எப்போதும் முதலில் எனக்கு நாடுதான். ஏனெனில், கிரிக்கெட்டுக்கு அறியப்படும் மாநிலத்திலிருந்து நான் வரவில்லை. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்திய அணிக்குப் பங்களிக்க விரும்பினேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெற முயற்சிக்கும் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்போது, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதால் இனி அதை என்னால் கூற முடியாது. அதனால், இப்போது என்னுடைய காதல் எல்லாம் விளையாட்டின் மீதுதான்." என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

AusvEng: 'சதமடித்த இங்லிஸ்; சைலண்ட் ஆக்கிய மேக்ஸ்வெல்' - 'B' டீமை வைத்து இங்கிலாந்தை சாய்த்த ஆஸி

சாம்பியன்ஸ் டிராபியின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதியிருந்தன. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 352 டார்கெட்டை ஆஸ்திரேலிய அணி மிக நேர்த்தியாக சேஸ் செய்து முடித்திருக்கிறது. மு... மேலும் பார்க்க

Champions Trophy: பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம் - குழம்பிய ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் லாகூரில் நடந்து வரும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் தவறாக ஒலிக்க விடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.Pakistan by mistakenly played Indi... மேலும் பார்க்க

IND vs PAK: "இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன?

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெற்று வருகிறது. A பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா (2)... மேலும் பார்க்க

SA vs AFG: பௌலிங்கில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்; எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 315 ரன்களை எடுத்திருந்தது. தென்னாப்... மேலும் பார்க்க

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவு... மேலும் பார்க்க

Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்

தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ... மேலும் பார்க்க