செய்திகள் :

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

post image

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார், சடலமாக கிடந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த திருநங்கை சங்கவி என்பதை கண்டுபிடித்தனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான அவர் விருத்தாசலம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கவி

இந்த நிலையில்தான் நேற்று மர்மமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்து விசாரணை செய்த போலீஸார், நான்கு திருநங்கையர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்திருக்கின்றனர். கொலைக்கான காரணம் குறித்துப் பேசிய போலீஸார், ``திருநங்கை சங்கவி அவர்களுக்காக இருக்கும் சங்கத்திற்கு கட்டுப்படாமல் (அமைப்பு) தன்னிச்சையாக செயல்பட்டு வந்திருக்கிறார். அதனால் சில திருங்கையர் அவர் மீது கோபமாக இருந்திருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் மக்புல் ஷெரீப் என்பவரது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற சங்கவி, அங்கிருந்து வெளியேறாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் ஷெரீப், பூக்கடை சேகர் என்பவருக்கு போன் செய்திருக்கிறார். அதையடுத்து சில திருநங்கைகளுடன் அங்கு சென்ற சேகர், சங்கவியை அடித்தே கொன்றிருக்கிறார். அதையடுத்து அவரது சடலத்தை போர்வையில் சுற்றி ஆட்டோவில் வைத்து எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

தலைமறைவாக இருக்கும் பூக்கடை சேகர்

ஆட்டோ காப்புக்காட்டுக்கு அருகில் சென்றதும், சங்கவியின் உடலை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றனர். ஆட்டோ ஓட்டுநருக்கு இது எதுவும் தெரியாது என்றாலும், இந்த சம்பவத்தை போலீஸிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார். அதனால் அவரையும் கைது செய்திருக்கிறோம். மேலும் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பூக்கடை சேகரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க