செய்திகள் :

`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

post image
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் பத்திரிகையாளர் மணிமாறன் ஆகியோரின் கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவான செறிவுமிக்க பேச்சு இங்கே.
கார்ட்டூனிஸ்ட் பாலா

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், ``கார்ட்டூன் என்பது ஒரு சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. சமூகத்தில் நடப்பதை சித்திரித்து எழுதுவது. இந்த கார்ட்டூனுக்கு எதிராக அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தும் போது, அந்த கார்டூனை விட அந்த அதிகாரம் கேலிப்பொருளாக மாறிவிடும். இதற்கடுத்து மாநில மற்றும் ஒன்றிய அரசு ஒரு கார்ட்டூனை கார்டூனாக மட்டும் பார்த்து ரசித்துவிட்டு கடந்துபோகும் படி வேண்டுகிறோம். கார்ட்டூன்களுக்கு எதிராக உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் நகைச்சுவை பொருளாக மாறிவிடுவீர்கள்." என்று பேசினார் கார்டூனிஸ்ட் பாலா.

அவரைத் தொடர்ந்து பேசிய பத்திரிகையாளர் மணிமாறன், "நாம் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது, மூன்றாவது முறையாக அதே போல இந்தியர்களை போர் விமானத்தில் விலங்கிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கார்டூன் ஒரு அறச்சீற்றம். இதற்காக விகடன் இணைய தளத்தை கொள்ளைப்புறம் வழியாக அரசு முடக்கியிருப்பது கண்டனத்துக்குரியது. இதுவரை என்னென்ன நடந்தது என்பது பற்றி விரிவாக விகடன் நேற்று இரவு தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளது. இதுவரை அரசிடமிருந்து இணைய தளம் முடக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

மணிமாறன்

ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற தொனியில் விகடனுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி இணைய தளங்களையும் சோஷியல் மீடியாக்களையும் முடக்குவதை வைத்து ஒன்றிய அரசு எதையோ செய்ய நினைக்கிறது. ஒன்றிய‌ அரசின் இந்த போக்கை முறியடிப்பது நம்முடைய கடமை. அதற்காக பத்திரிகையாளர் மன்றம் எப்போதும் துணை நிற்கும்." என்று பேசினார்

`நான் CBSE பள்ளி நடத்தவில்லை; ஊடக விமர்சனத்திற்காக இப்படி...' - அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

NEP: ”தேசிய கல்விக் கொள்கை அமலானால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டுவிடுவார்கள்”- முத்தரசன்

தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

கும்பமேளா: "அந்த தண்ணீரை நீங்கள் குடியுங்கள் பார்க்கலாம்.." - ஆதித்யநாத்திற்கு பிரசாந்த் பூஷன் சவால்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் புனித நீராடுவதில் மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தாக்கல் செய்த அறிக்கை அதிர்ச்சித் த... மேலும் பார்க்க

Delhi: மோடி முன்னிலையில் டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தா; ரேஸில் இருந்தவர்களுக்கும் பதவி!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பா.ஜ.க, முதல்வர் யார் என்பதை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வந்தது. நேற்று மாலைதான் புதிய முதல்வர் யார் என்பதை கட்சித் தலைமை அறிவ... மேலும் பார்க்க

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்

நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்... மேலும் பார்க்க

Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ... மேலும் பார்க்க