செய்திகள் :

Delhi: மோடி முன்னிலையில் டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தா; ரேஸில் இருந்தவர்களுக்கும் பதவி!

post image

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பா.ஜ.க, முதல்வர் யார் என்பதை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வந்தது. நேற்று மாலைதான் புதிய முதல்வர் யார் என்பதை கட்சித் தலைமை அறிவித்தது. புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா இன்று காலையில் ராம்லீலா மைதானத்தில் நடந்த விழாவில் புதிய முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். ரேகா குப்தாவை தொடர்ந்து முதல்வர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த பர்வேஸ் சர்மா, கபில் சர்மா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இது தவிர மஞ்ஜிந்தர், ஆசிஷ் சூட், பங்கஜ் குமார், ரவீந்தர் ஆகியோரும் அடுத்தடுத்து பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார்.

பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். மற்றொரு பா.ஜ.க மூத்த தலைவர் விரேந்தர் குப்தா சபாநாயகராக அறிவிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் விரேந்தர் குப்தா அவையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு இப்போது அவர் சபாநாயகராக மீண்டும் அவைக்குச் செல்கிறார். பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.ஸ்வாதியும் கலந்து கொண்டார். அமைச்சராகப் பதவியேற்று இருக்கும் கபில் சர்மா இதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட ரேகா குப்தாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

20 ஆண்டுகள்... ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளன... மேலும் பார்க்க

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது... சிறையிலடைத்த போலீஸ்!

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில்... மேலும் பார்க்க

`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்

கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக... மேலும் பார்க்க

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது ... மேலும் பார்க்க

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க