செய்திகள் :

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்

post image
நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.

அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்ந்துக்கொண்டனர். அதில் இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரி ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.

இந்தியா குறித்து ட்ரம்ப் பேசும்போது, "இந்தியாவில் இவருக்கு (எலான் மஸ்க்கிற்கு) கார் விற்பது மிகவும் கடினம். இது உண்மையா... இல்லையா என்பது தெரியாது. ஆனால், அப்படி தான் என்று நினைக்கிறேன்" என்று ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது, எலான் மஸ்க் இடைமறித்து, "இந்தியாவில் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படுகிறது" என்று கூறினார்.

டெஸ்லா இந்தியாவில் தொடங்கப்படுமா?!

இந்தியாவில் எலான் மஸ்க் தொழிற்சாலை தொடங்குவது சம்பந்தமாக ட்ரம்ப் பேசும்போது, "எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவது 'ஓகே' தான்... ஆனால், அது அமெரிக்காவிற்கு 'நியாயமற்றது' ஆகும்" என்றார்.

"நான் இந்தியா பிரதமர் மோடியிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் இதை செய்கிறீர்கள்... நாங்களும் உங்களுடன் மிக நியாயமாக இருக்கப்போகிறோம்" என்று கூறினார்.

இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரி 36 சதவிகிதமா என்று நேர்காணல் செய்த சீன் ஹன்னிட்டி கேட்கும்போது, எலான் மஸ்க், 'இல்லை... இல்லை... வாகன இறக்குமதிக்கு இந்தியா 100 சதவிகித வரி விதிக்கிறது" என்று பதிலளித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கிற்கு நல்ல நட்பு நிலவி வருகிறது. தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதில் மஸ்க்கின் பங்கு கணிசமாக உள்ளது. இப்போது இந்த நேர்காணலில் இந்தியாவில் எலான் மஸ்க் தொழிற்சாலை தொடங்குவதற்கு ட்ரம்ப் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கினால், அதில் இந்திய பொருளாதாரத்திற்கு குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டுவரும். ட்ரம்ப்பின் அதிருப்தி எலான் மஸ்க்கின் முடிவை மாற்றுமா... அல்லது என்னவாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!

`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்

கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக... மேலும் பார்க்க

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது ... மேலும் பார்க்க

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க

கும்பமேளா: வாரணாசியில் நடந்தது என்ன? - சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரர்கள் விளக்கம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்திருந்தனர்.இந்நிலையில் அவர்களை விம... மேலும் பார்க்க

`நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா?' - ஆவேசமான பொன்னார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொடியேற்றுவிழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் சுனில் தலைமையில் முன்னாள் பிரதமர் வாய்பா... மேலும் பார்க்க