செய்திகள் :

கும்பமேளா: வாரணாசியில் நடந்தது என்ன? - சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரர்கள் விளக்கம்

post image
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு தமிழ்நாடு அரசு அழைத்து வந்திருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வீரர் ஒருவர், “ 16,17,18 ஆம் தேதி வாரணாசியில் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் சென்றிருந்தோம். அதேபோல கர்நாடக, கேரளா, ஆந்திராவில் இருந்தும் வீரர்கள் வந்திருந்தனர். 18 ஆம் தேதி போட்டி முடிந்தது. 20 ஆம் தேதி நாங்கள் ரயிலில் டிக்கெட் புக் செய்திருந்தோம். நாங்கள் ரயில் ஏற சென்ற இடத்தில் அதிகளவில் கூட்டம் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு 5 ஆயிரம் பேர் நின்றிருந்தார்கள்.

டிக்கெட் எடுக்காதவர்களும், முன்பதிவில்லா (Unreserved Ticket) ரயில் டிக்கெட் எடுத்தவர்களும்தான் அதிகமாக இருந்தார்கள். நாங்கள் மாற்றுதிறனாளிகள் எங்களை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் என்று அங்குள்ள காவல்துறையினரிடம் உதவி கேட்டோம். அவர்களுக்கு நாங்கள் பேசுவது புரியவில்லை. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதன்பிறகுதான் சமூகவலைதளங்களில் வீடியோவை பதிவிட்டோம். 

இந்த தகவல் சொல்லி 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் தமிழக அரசு தரப்பிலிருந்து அழைப்பு வந்தது.  ஏழு மணிக்கு நாங்கள் உதவி கேட்டு ஒருவர் ஒருவராக தொடர்பு கொண்டு இருந்த நேரத்தில் 8 மணிக்கெல்லாம் தமிழ்நாடு அரசு சார்பில் எங்களிடம் பேசி விமானம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஒரு மணி நேரத்தில் எங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து விட்டன.

எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விமான பயணம் குறித்து அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தியாவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான விமான போக்குவரத்து வசதிக்கான உதவித்தொகை தமிழ்நாட்டில் வழங்கப்பட்டால் அது மொத்த நாட்டுக்குமான முன்மாதிரியாக இருக்கும். எங்கள் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க

CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம்

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக, மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிர... மேலும் பார்க்க

Veena Reddy: USAID நிதியை நிறுத்திய ட்ரம்ப்... பாஜக எம்.பி குறிப்பிட்ட வீணா ரெட்டி; யார் இவர்?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா USAID மூலம் நிதியுதவி செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. 1950 களில் இந்தியாவின் வாக்களிப்போர் சதவிகிதம் சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அதனால், இந்தியாவி... மேலும் பார்க்க

20 ஆண்டுகள்... ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளன... மேலும் பார்க்க