செய்திகள் :

'ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்துக்கும் எதிரான தாக்குதல்!' - விகடன் குழும ஆசிரியர் அறிவழகன்

post image
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட விகடன் குழும ஆசிரியர்களுள் ஒருவரான அறிவழகன், இந்த விவகாரத்தில் விகடன் தரப்பு நியாயத்தை கூர்மையாக முன்னெடுத்து வைத்தார்.
ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் அறிவழகன் பேசியதாவது, "நம் வீட்டில் ஒரு துக்கமான சம்பவம் நடக்கும்போது, ஒரு வீட்டில் போய் விருந்து சாப்பிடுவோமா? அதுவும் அந்த துக்ககரமான சம்பவத்துக்கு காரணமானவர் வீட்டுக்கே சென்று விருந்து சாப்பிடுவோமா? இப்போது அதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் கண்டித்துதான் அந்த கார்ட்டூன் வெளிவந்தது. இது விகடன் என்ற ஒரு தனிப்பட்ட பத்திரிகைக்கான எதிர்ப்பு அல்ல என்பதை பத்திரிகையாளர் மணி ஒரு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

எந்த தனிமனிதனும் முன்வந்து சுதந்திரமாக பேசக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே இது. இதற்கு எதிராக நாம் கிளர்ந்து எழ வேண்டும். அதேபோல, இந்தச் சம்பவம் தொடர்பாக திரு.என்.ராம் அவர்கள் தன்னிச்சையாக பல ஆங்கில ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

அறிவழகன்

விகடனுக்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள பல பத்திரிகையாளர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இங்கே தன்னெழுச்சியுடன் பத்திரிகையாளர்கள் ஒற்றுமையோடு விகடனுக்கு துணையாக கூடியுள்ளதை பார்க்கையில் நெகிழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் உங்கள் எல்லோருக்கும் நன்றி" எனக் கூறினார்.

`நான் CBSE பள்ளி நடத்தவில்லை; ஊடக விமர்சனத்திற்காக இப்படி...' - அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

NEP: ”தேசிய கல்விக் கொள்கை அமலானால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டுவிடுவார்கள்”- முத்தரசன்

தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

கும்பமேளா: "அந்த தண்ணீரை நீங்கள் குடியுங்கள் பார்க்கலாம்.." - ஆதித்யநாத்திற்கு பிரசாந்த் பூஷன் சவால்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் புனித நீராடுவதில் மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தாக்கல் செய்த அறிக்கை அதிர்ச்சித் த... மேலும் பார்க்க

Delhi: மோடி முன்னிலையில் டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தா; ரேஸில் இருந்தவர்களுக்கும் பதவி!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பா.ஜ.க, முதல்வர் யார் என்பதை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வந்தது. நேற்று மாலைதான் புதிய முதல்வர் யார் என்பதை கட்சித் தலைமை அறிவ... மேலும் பார்க்க

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்

நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்... மேலும் பார்க்க

Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ... மேலும் பார்க்க