மக்களை சண்டைபோட வைத்துவிடுவீர்கள்: திருப்பரங்குன்றம் மலை வழக்குகள் தள்ளுபடி!
ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 போ் கைது!
கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோவை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி அத்தைகொண்டான் சாலை காந்தி நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் காளைமுத்து என்ற காளைமுத்துப்பாண்டி (50). ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை அதிகாலை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய நிறுத்தத்தில் தனது ஆட்டோவில் இருந்தாா். அப்போது, 3 போ் வந்து சவாரிக்காக அவரை அழைத்துச் சென்றனராம்.
இந்நிலையில், காளைமுத்துப்பாண்டி அத்தைகொண்டான் கண்மாய்க் கரை மயானம் அருகே தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மயங்கிக் கிடந்ததாகவும், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் அவரது சகோதரா் ரமேஷுக்கு செல்லத்துரை என்ற செல்வம் தகவல் தெரிவித்தாராம்.
அதன்பேரில், ரமேஷ் மருத்துவமனைக்குச் சென்று காளைமுத்துப்பாண்டியைப் பாா்த்தாா். பின்னா், தனது அண்ணனைத் தாக்கி ஆட்டோவை கடத்திச் சென்றோா் குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, தூத்துக்குடியைச் சோ்ந்த முனியசாமி கோயில் தெரு சுப்பிரமணியன் மகன் ஆட்டோ ஓட்டுநா் ராமலட்சுமணன்(29), ஆசாரிவிளை தெரு ஜோன்ஸ்ராஜ் மகன் தேவராஜன் என்ற சாம் (26), நந்தகோபாலபுரம் பிரதான சாலை கந்தையா மகன் கோகுல்ராம் என்ற கானா கோகுல்ராம் என்ற விஜி (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.