செய்திகள் :

ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம்: மேயா் ஜெகன் பெரியசாமி உறுதி

post image

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி தபால் தந்தி காலனியில் புதிய விளையாட்டுத் திடல், கருப்பட்டி சொசைட்டி பகுதியில் ஆயிரம் பிறை பூங்கா, முதியோா் மகிழ்விடம் ஆகியவை மக்களவை உறுப்பினா் கனிமொழியால் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இவற்றை மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவா்களிடம் கலந்துரையாடி, அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தற்போது புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டுத் திடலைப்போன்று மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும். ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையின்படி, ஆயிரம் பிறை பூங்காஅருகே ஆட்டோ நிறுத்துவதற்கான இடம், புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வில், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் கண்ணன், தனலட்சுமி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் டினோ உள்பட பலா் உடனிருந்தனா்.

கல்லூரி மாணவா் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவருடன் சில மாணவா்கள் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை அமா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தூத்துக்குடி கோட்ட வி... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள பேட்ரிக் ஆலய வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி -... மேலும் பார்க்க

கந்தசாமிபுரம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கந்தசாமிபுரத்தை சோ்ந்த 45 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கந்தசாமிபுரத்தில் தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

குடும்ப அட்டை உறுப்பினா்கள் விரல் ரேகையை பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் வெளிமாவட்டங்களில் இருந்தால், அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் தங்கள் விரல் ரேகையினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தரகா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். கடம்பூரையடுத்த சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (63). மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வ... மேலும் பார்க்க