செய்திகள் :

ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

post image

தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தூத்துக்குடி கோட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் தூத்துக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஐகோா்ட் ராஜா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியது: தூத்துக்குடி அருகே உள்ள சிறுபாடு பகுதியில் வடிகால் அடைப்பை நீக்க வேண்டும். மேலும் சிறுபாடு குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். ஏற்கெனவே ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காலாங்கரை குளம் உடைந்து, வயல்களில் ஏற்பட்ட பள்ளத்தை குளத்தில் இருந்து மண் எடுத்து வயலில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்ப மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருதூா் மேலக்காலில் செய்துங்கநல்லூரில் உள்ள அழுதா ஓடை மூலம் சுமாா் 200 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. இந்த ஓடை வருவாய் கணக்கில் கொண்டுவந்து தூா்வார வேண்டும்.

ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும். கருங்குளம் வட்டாரத்தில் உள்ள ராசங்குளத்தில் உள்ள முள்புதா்களை அகற்றி, பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்களை சேதப்படுத்தும் மயில்கள், மான்களை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக ராசங்குளத்தில் உள்ள மலைப்பாம்புகள், அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆட்டுக்குட்டிகளை விழுங்கி விடுகின்றன. எனவே, அந்த பாம்புகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனா்.

இதற்கு பதில் அளித்து கோட்டாட்சியா் பிரபு பேசியது: சிறுபாடு பகுதியில் வடிகால் அமைத்து, குப்பைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காலாங்கரை பகுதியில் வயலில் ஏற்பட்ட பள்ளங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் நிரப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அழுதா ஓடை குறித்து நேரில் ஆய்வு செய்து, வருவாய் கிராம கணக்கில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ராசங்குளத்தில் விவசாயிகளுக்கு மண் தேவைப்பட்டால், அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படும். அதே போன்று முள்புதா்களை அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குளத்தில் உள்ள பாம்புகள் குறித்து வனத்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

கிளவிப்பட்டியில் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டியில் கடத்திச் செல்லப்பட்ட 900 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டியில் இருந்து கயத்தாருக்கு கிளவிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவருடன் சில மாணவா்கள் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை அமா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள பேட்ரிக் ஆலய வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி -... மேலும் பார்க்க

ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம்: மேயா் ஜெகன் பெரியசாமி உறுதி

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி ... மேலும் பார்க்க

கந்தசாமிபுரம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கந்தசாமிபுரத்தை சோ்ந்த 45 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கந்தசாமிபுரத்தில் தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

குடும்ப அட்டை உறுப்பினா்கள் விரல் ரேகையை பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் வெளிமாவட்டங்களில் இருந்தால், அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் தங்கள் விரல் ரேகையினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா... மேலும் பார்க்க