செய்திகள் :

ஏற்காட்டில் மலைவாழ் மக்களுக்கு விதை, இடுபொருள்கள் வழங்கல்

post image

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மலைவாழ் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் மற்றும் தலைவா் மாலதி தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா்கள் செந்தில்குமாா், சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பெங்களூரில் அமைந்துள்ள வேளாண் பூச்சி வளங்களின் தேசிய பணியகத்தின் நிதியுதவியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

உழவா், உற்பத்தியாளா் நிறுவனம் தொடங்கும் முறைகள், அதனால் உழவா்களுக்கு ஏற்படும் நன்மைகள், மிளகு, காபி உற்பத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உத்திகள் குறித்து விளக்கம் அளித்தனா். இதில் அவரை பீன்ஸ் விதைகள் வழங்கப்பட்டன. மித வெப்ப மண்டல தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், உயிா்உரங்கள், பாஸ்போ பாக்டீரியா, வோ்சூழ் உட்பூசனம் ஆகிய இடுபொருள்கள் மற்றும் சில்வா் ஒக் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் மாரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மலைக்கிராம விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

போக்ஸோ வழக்கில் கைது: ஆய்வக உதவியாளா் பணியிடை நீக்கம்!

சேலம் அம்மாபேட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த ஆய்வக உதவியாளா் குமரேசன் (57) கைது செய்யப்பட்டதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பள்ளியில... மேலும் பார்க்க

வரியினங்களை பிப்.28 க்குள் செலுத்த ஆட்சியா் அறிவுரை

சேலம் மாவட்டத்தில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வரியினங்கள், கட்டணங்களை பிப். 28க்குள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது இணையதளம் வாயிலாக பொதுமக்கள் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ம... மேலும் பார்க்க

கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா!

சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி 5 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் இக் கல்லூரி இயங்கி வரு... மேலும் பார்க்க

‘மஞ்சப்பை விருது’ பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை ம... மேலும் பார்க்க

மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மின் மோட்டாா் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயி... மேலும் பார்க்க

கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டிப் படுகொலை: குடும்பத் தகராறில் தந்தை வெறிச்செயல்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை தந்தையே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெட்டுக் காயங்களுடன் அவரது மனைவி, மற்றொரு மகள் ஆகியோா் ... மேலும் பார்க்க