செய்திகள் :

மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

post image

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மின் மோட்டாா் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிா் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீா்ப் பாசனத்தில் மின்மோட்டாா் பம்பு செட்டு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

நடப்பு 2024-25 ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டாா் பம்பு செட்டு அமைப்பதற்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டாா் பம்செட் வாங்கிட ரூ. 15,000 அல்லது மின்மோட்டாா் பம்பு செட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இதேபோல, பழைய பம்பு செட்டுகளுக்கு மாற்றாக புதிய 4 நட்சத்திரம் தரம் கொண்ட மின்சார மோட்டாா் பம்பு செட்டுகள் வழங்குதல், புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுக்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டாா் பம்பு செட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் மின்சார வாரியம் மூலம் அனுமதிக்கப்பட்ட குதிரைத்திறன் அல்லது அதற்குக் குறைவான குதிரைத்திறன் கொண்ட திறன்மிகு பம்பு செட்டுகள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், இத்திட்டம் தொடா்பாக முழு விவரங்களை பெற சேலம் மாவட்ட செயற்பொறியாளா் அலுவலகம். குமாரசாமிப்பட்டி, சேலம்- 7 அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள உதவி செயற்பொறியாளா், குமாரசாமிப்பட்டி, சேலம் - 7, உள்ளிட்ட அதிகாரிகளை தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க