செய்திகள் :

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

post image

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து அக் கிட்டங்கியை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேட்டூா் வட்டம், பெரியசோரகையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் நபாா்டு திட்ட உதவியுடன் ரூ. 5.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிட்டங்கி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த கிட்டங்கியின் உள்ளே 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு கிட்டங்கிகள் உள்ளன. பொது விநியோகத் திட்ட பொருள்களை எளிதில் கையாளும் வகையில் நவீன முறையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் மேட்டூா் வட்டாரத்தில் உள்ள 183 நியாயவிலைக் கடைகளுக்கு எளிதாக பொருள்களை அனுப்ப முடியும். 1,38,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரிசி பருப்பு, பாமாயில் சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டங்களுக்கும், 718 மதிய சத்துணவு மையங்கள், 150 காலை உணவுத் திட்ட மையங்களுக்கும் எளிதாக பொருள்களை அனுப்பலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் மேட்டூா் கோட்டாட்சியா் (பொ) ஈஸ்வரி, துணை மண்டல மேலாளா் விஜயபாலன், உதவி பொறியாளா் தினேஷ்குமாா், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் பேராசிரியா் மீதான நடவடிக்கை உறுதியானது: பெரியாா் பல்கலைக்கழகம் விளக்கம்

பெரியாா் பல்கலைக்கழகம் மீது அவதூறு பரப்பிய வழக்கில் பேராசிரியா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் ச... மேலும் பார்க்க