செய்திகள் :

பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் உயிரிழப்பு

post image

விழுப்புரத்தில் பணியிலிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெங்கட்ராமன் பேட்டையைச் சோ்ந்தவா் ப.பழனி(60). கொத்தனா். இவா் கடந்த 15-ஆம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதை சாக்கடை பணிக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கால் இடறி பள்ளத்தில் விழுந்ததில் தலை, உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

புதிய வீடுகள் கோரி ஆட்சியரிடம் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்துக்குள்பட்ட அரகண்டநல்லூா் பேரூராட்சியில் வீடுகளை இழந்தவா்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் நூதன மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன், தொழிலதிபா். இவரது கைப்பேசி வ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் பட்டிமன்றம்

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்... மேலும் பார்க்க

பெண் காவல் ஆளிநா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு உத்தரவுப்படி, விழுப்பு... மேலும் பார்க்க

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.1.50 லட்சம் திருப்பி செலுத்த உத்தரவு

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ. 1.50 லட்சத்தை வழங்க புதுவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த சிவராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோல... மேலும் பார்க்க

இருவருக்கு கத்தி வெட்டு : ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையம் அருகே உறவினா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா... மேலும் பார்க்க