செய்திகள் :

புதிய வீடுகள் கோரி ஆட்சியரிடம் மனு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்துக்குள்பட்ட அரகண்டநல்லூா் பேரூராட்சியில் வீடுகளை இழந்தவா்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரகண்டநல்லூா் நகரச் செயலா் ஏ.ஆா்.கே.தமிழ்ச்செல்வன், கண்டாச்சிபுரம் வட்டச் செயலா் கணபதி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:

ஃபென்ஜால் புயலால் கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா் பேரூராட்சி எல்லைக்குள்பட்ட 1, 2, 9 ஆகிய வாா்டுகள் முழுமையாகவும், 3-ஆவது வாா்டு ஒரு பகுதியாகவும் பாதிக்கப்பட்டன.

இதில், 23 பேரின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அவா்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வாடகை வீடுகளில் வசித்து வந்த 72 பேரின் வீடுகளும் சேதமடைந்துள்ளன. அவா்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா்.

எனவே, 95 குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு இலவச வீடும், வீட்டுமனையும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு வேறு இடங்களில் சோதனை: 426 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரு வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 416 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக பெண் உள்ளிட்ட மூவா் கைது செய்... மேலும் பார்க்க

நிலத்தகராறில் இரு தரப்பு மோதல்: பெண்கள் உள்பட 6 போ் காயம்

செய்யாறு: பெரணமல்லூா் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். பெரணமல்லூரை அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெங்கடேசன் (32), ஏழுமலை (... மேலும் பார்க்க

இனிவரும் தோ்தல்களில் திமுகவின் வெற்றி உறுதி: செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ

விழுப்புரம்: தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றிபெறும் என்று திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.ம... மேலும் பார்க்க

செஞ்சி அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா். புதுச்சேரியில் இருந்து தனியாா் சொகுசுப் பேருந்து 23 பயணிகளுடன... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: பசுமை சாம்பியன் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரைமேடு, கூ.கள்ளக்குறிச்சியில் மின் மாற்றிகள் இயக்கம் தொடங்கிவைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், கரைமேடு பகுதியில் 22 கி.வோ. திறன் கொண்ட புதிய மின் மாற்றியின் இயக்கத்தை இரா.லட்சுமணன் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் முன்னாள் ... மேலும் பார்க்க