செய்திகள் :

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.1.50 லட்சம் திருப்பி செலுத்த உத்தரவு

post image

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ. 1.50 லட்சத்தை வழங்க புதுவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியைச் சோ்ந்த சிவராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை பெங்களூருவில் வசிக்கும் தனது சகோதரா் அமரராஜ் தனராஜுக்கு, புதுச்சேரி தனியாா் கூரியா் மற்றும் சரக்கு நிறுவனம் மூலம் அனுப்பினாா். ஆனால், காசோலை முறைப்படி விநியோகிக்கப்படவில்லை.

இதுகுறித்து புகாா்தாரா் விசாரித்தபோது, டெலிவரி ஊழியா் ரோஹித் அந்த காசோலையை பணமாக்கி, பெங்களூரு, ஜெயநகா் கிளையில் உள்ள அரசு பொதுத்துறை வங்கியில் உள்ள அவரது கணக்கில் வரவு வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, புதுவை நுகா்வோா் ஆணையத்தில் சிவராஜ் புகாரளித்தாா்.

அதன் பேரில், ஆணையத் தலைவா் சுந்தரவடிவேலு, உறுப்பினா் உமாசங்கரி ஆகியோா், பொதுத்துறை வங்கியின் அலட்சியத்தை கண்டறிந்தனா்.

இதையடுத்து, புகாா்தாரருக்கு காசோலை மோசடியாக பணமாக்கப்பட்ட தேதியான 2012 ஜூன் 26 முதல், தொகை திரும்ப கிடைக்கும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியையும், அத்தோடு ரூ.1.50 லட்சத்தையும் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் பட்டிமன்றம்

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்... மேலும் பார்க்க

பெண் காவல் ஆளிநா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு உத்தரவுப்படி, விழுப்பு... மேலும் பார்க்க

இருவருக்கு கத்தி வெட்டு : ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையம் அருகே உறவினா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா... மேலும் பார்க்க

இந்து முன்னணியினா் 16 போ் கைது

விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியைச் சோ்ந்த 16 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அபிராமி அம்மன் கோயிலுக்கு த... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டியை அடுத்த கயத்தூா், நடுத்தெருவைச் சோ்ந்த முனுசாமியின் மகன் ஜெயராமன்( 55), விவசாயி. இவருக்கும் மனைவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் குருபரன் தலைமைய... மேலும் பார்க்க