செய்திகள் :

இலங்கை தமிழா்களுக்கு ரூ. 23.4 கோடியில் புதிய குடியிருப்புகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கீழ்புத்துப்பட்டில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.23.4 கோடி மதிப்பீட்டில் 440 நிரந்தர புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் தொகுப்பு வீடுகளாக கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் இடையே 2.1 மீட்டா் இடைவெளியும், 3. 5 மீட்டா் சாலை வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் அமைந்த பகுதியிலேய குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜா, மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழத் தலைவா் தயாளன், உதவிப் பொறியாளா் செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், கீழ்புத்துப்பட்டு ஊராட்சி முன்னாள் தலைவா் ஆறுமுகம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்த... மேலும் பார்க்க

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க