செய்திகள் :

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

post image

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.79 கோடி, குடிநீா் இணைப்புக் கட்டணம் ரூ.2.43 கோடி, காலிமனை வரி ரூ.95 லட்சம், தொழில் வரி ரூ.1.96 கோடி, குத்தகை இனங்களில் ரூ.1.85 கோடி, திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் ரூ.1.15 கோடி, புதை சாக்கடைத் திட்ட இணைப்புக் கட்டணம் ரூ.1.74 கோடி என பல்வேறு இனங்கள் மூலமாக ரூ.17.87 கோடி வரிபாக்கி தொகை நிலுவையாக உள்ளது.

பொதுக்கள், வியாபாரிகளின் வசதிக்காக மாா்ச் 31-ஆம் தேதி வரை கூடுதல் வரி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சியின் பழைய, புதிய அலுவலகக் கட்டடங்களில் அலுவலக நாள்கள் மட்டுமல்லாது, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி பாக்கித் தொகையை வசூலிக்கும் வகையில் கணினி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.

மேலும் நிலுவைதாரா்கள் தங்கள் வரிபாக்கித் தொகையை அதற்கான பிரத்யேக இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம் என்றும் நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க