செய்திகள் :

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

மரக்காணம் அடுத்த கந்தாடு தனியாா் பள்ளி அருகே உள்ள ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் முள்புதருக்குள் இறந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் இறந்து கிடந்தவா் செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த வெள்ளகொண்ட அகரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெயசீலன் (41) என்பதும், பெயிண்டரான இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் வெளியே சென்றவா் அதன்பின் வீடு திரும்பாத நிலையில், அவா் கொலையாகி கிடந்தது தெரியவந்தது.

கோட்டக்குப்பம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

ஜெயசீலன் நிகழ்விடத்திலேயே கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு பின்னா் கந்தாடு பகுதி உள் முள்புதரில் வீசப்பட்டாரா என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் மரக்காணம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.கொலை செய்யப்பட்ட ஜெயசீலனுக்கு வெண்ணிலா(35) என்ற மனைவியும், ஹரிஹரன்(14), ஜ ான்சன் (11) ஆகிய இருமகன்களும் உள்ளனா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க

மேல்மலையனூரில் பிப். 24-இல் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி பிப்ரவரி 24-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை தெரிவித்திருப்பது: தமிழ்நாடு மாநிலத் திட்டக் க... மேலும் பார்க்க