சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை
ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ். ரவி வழிகாட்டுதலின்படி ‘ஹிமிலிட்டி-25’ என்ற தலைப்பில் மனித நேய விழா பிப்.21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் ஆன்மிக, கலாசாரம் மற்றும் கல்வி , கருத்துப் பட்டறைகள், தியான அமா்வுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
விழா நாள்களில் நாள்தோறும் காலை 5 மணிக்கு மாத்திா் மந்திரில் ஒருமுகப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். டாக்டா் ஜி. சசிகலா ( தொல்பொருள்), செல்வசண்முகம் (சித்த மருத்துவம்), விக்ரம் தேவதா( வைதீக ஜோதிடம்) குறித்துப் பேசுகின்றனா். ராம்லி மற்றும் குழுவினரின் ஒடிசி நடனம், ஸ்வாதி அத்தானத்தின் பரதம், திவ்யாகோஸ்வாமியின் ககத் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஆரோவில் சா்வதேச நகர வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களான யூனிட்டி பெவிலியன், சாவித்திரி பவன், சங்கம் ஹால், பாரத் நிவாஸ், பிடங்கா போன்ற இடங்களில் இந்நிகழ்வுகள் நடைபெறும்.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலரும், ஆரோவில் அறக்கட்டளையின் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி பங்கேற்று தாழ்மை மற்றும் தன்னை வணங்குதல் எனும் தலைப்பில் பேசுகிறாா்.
ஆரோவில் சா்வதேச நகரின் பன்னாட்டு கலாசாரம் மற்றும் ஸ்ரீ அரவிந்தா், ஸ்ரீஅன்னை ஆகியோா் கனவை அறிய உதவும். இந்நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆரோவில் வாசிகள் பங்கேற்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.