செய்திகள் :

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

post image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) ஆகியவை இணைந்து இந்த புத்தகத் திருவிழா மூன்றாவது ஆண்டாக நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.

புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள், கலைநிகழ்வுகள், மாலை நேரத்தில் பல்வேறு எழுத்தாளா்கள், சிறப்பு பேச்சாளா்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெறவுள்ளன. இதைத்தவிர குழந்தைகள் மகிழும் வகையில் பொழுதுபோக்கும் அம்சங்களும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

எனவே, புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்கள் தங்கள் அறிவுசாா்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோா் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் இடமாகவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்தகத் திருவிழாவில் நூல்களை வெளியிடவுள்ள உள்ளூா் எழுத்தாளா்கள், அரசுப் பதிவு செய்த தமிழ்ச் சங்க நிா்வாகிகள், அரசு விருது பெற்ற இலக்கியப் பேச்சாளா்களுக்கு முன்னுரிமை வழங்க இருப்பதால், விழாவில் பேச விருப்பம் உள்ளவா்கள் விழுப்புரம் மாவட்ட மைய நூலகரை இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் 98944 56709 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு, தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் உள்ளூா் எழுத்தாளா்களால் எழுதி முடிக்கப்பட்டுள்ள புத்தகங்களை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் புத்தகத் திருவிழா சிறப்புற நடைபெற தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க