செய்திகள் :

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீதான வழக்கு விசாரணை மாா்ச் 26-க்கு ஒத்திவைப்பு

post image

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை மாா்ச் 26-க்கு ஒத்திவைத்து, விக்கிரவாண்டி நீதித் துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், நேமூரில் 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை சீமான் அவதூறாக பேசியதாக, கஞ்சனூா் காவல் நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரமேஷ் புகாரளித்தாா். விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல், நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்தாண்டு அக்டோபா் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சீமான் ஆஜரானாா்.

நவம்பா் 4, 6-ஆம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின் போது ஆஜராகாததையடுத்து, கடந்த ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது வழக்குரைஞா் பேச்சிமுத்து, நீதிபதியிடம் சீமான் வராததற்கான காரணம் குறித்த மனுவைத் தாக்கல் செய்தாா். இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி கே.சத்தியநாராயணன், சீமானுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும், விசாரணையில் ஆஜராகுவதிலிருந்து விலக்களிக்கக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவை கடந்த 6-ஆம் தேதி நீதிபதி வேல்முருகன் விசாரித்தாா். மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டாா்.

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் தமது வழக்குரைஞா்கள் ரூபன்,பேச்சிமுத்து, நன்மாறன் ஆகியோருடன் சீமான் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். வழக்கு சம்பந்தப்பட்ட பேச்சின் சி.டி.யை வழங்குமாறு கோரி மனு அளித்தாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி சத்தியநாராயணன், முன்னாள் பிரதமரை அவதூறாக பேசிய குற்றத்தை ஒப்புக் கொள்கிறீா்களா என சீமானிடம் கேட்டாா். அதற்கு நான் அவதூறாக பேசவில்லை என சீமான் பதிலளித்தாா். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடித்தால்தான் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்பது ஜனநாயகமற்றது என்றாா்.

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்த... மேலும் பார்க்க

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க