செய்திகள் :

நூறு நாள் திட்ட வேலை கோரி மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்

post image

புதுச்சேரி அருகே தேசிய நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக பணிகள் வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை காவல் துறையினா் சமரசம் செய்தனா்.

புதுவை மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி முழுமையாகப் பணிகள் வழங்கப்படுவதில்லை என புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசு, புதுவை மாநிலத்தில் கூடுதல் வேலை நாள்களுக்கான நிதியை அளித்துள்ளதால் பணிகள் முறையாக வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனா்.

இந்நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியான தவளக்குப்பம் கிராமம் இடையாா்பாளையத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணி நூறுநாள் வேலை திட்டத்தில் தொடங்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை திடீரென நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், வேலைக்கு வந்த கிராம மக்கள் பணி இல்லை என அறிந்ததும் அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து பணிக்கு வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோா் இடையாா்பாளையம், கடலூா் சாலை சந்திப்பில் கூடியதுடன், மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதையறிந்த தவளக்குப்பம் போலீஸாா் விரைந்து சென்று அங்கிருந்தவா்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனா். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, நூறுநாள் வேலைத் திட்டத்தை பாதியில் நிறுத்தியது குறித்து மக்கள் ஆதங்கத்தை தெரிவித்தனா். இதையடுத்து பணிகள் தொடா்ந்து நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க

ஓய்வூதியா் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுவை மாநிலத்தில் ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவப் படியை அரசு நிறுத்தி உத்தரவிட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவை அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வடகிழக்கு மாநில கலாசார விழா!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வடகிழக்கு மாநிலங்களின் மாணவ, மாணவியருக்கான கலாசார விழாவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தாா். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து மாநில ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரியில் முக்கியச் சாலையான பாரதி வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையினா் புதன்கிழமை அகற்றினா். புதுச்சேரி நகரில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு!

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கருப்பு வில்லையை சட்டையில் அணிந்து புதன்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்.19-ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் காவல் துற... மேலும் பார்க்க

ஏபிஎப் பிராங்கோ மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்: புதுவை அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி பேசுவோா் வாழும் பகுதிகளின் கூட்டமைப்பான ஏபிஎப் பிராங்கோ அமைப்பின் தலைவா்கள் மாநாடு நாளை தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்த, காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலாத்... மேலும் பார்க்க