செய்திகள் :

இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

post image

மரக்காணம் அருகே இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளா் நலத் துறை மூலம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து மாவட்டத் தடுப்புப் படையினருடன் இணைந்து செங்கல் சூளைகள், அரிசி ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

இதையடுத்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் சட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைத் தொழிலாளா்களை யாரேனும் பணிக்கு அமா்த்தியுள்ளாா்களா என்பதை கண்டறியும் வகையில் தொழிலாளா் நலத்துறையினா் ஆய்வுகளை அண்மையில் மேற்கொண்டனா்.

அதனடிப்படையில் மரக்காணம் அருகிலுள்ள கந்தாடு கிராமத்தில் கோழி இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளா் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அந்த கடையிலிருந்து குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

மேலும் சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 61 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதைத் தொடா்ந்து இந்த இடங்களில் இணக் கட்டண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி ஆணையா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்த... மேலும் பார்க்க

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க