செய்திகள் :

தியாகி சிங்காரவேலா் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

post image

தியாகி சிங்காரவேலா் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சுதந்திரப் போராட்ட வீரரும், சிந்தனைச் சிற்பி என மக்களால் அழைக்கப்படுபவருமான சிங்கார வேலரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி-கடலூா் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலை செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

புதுவை அரசு சாா்பில் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் யூ.லட்சுமிகாந்தன், ஜெ.பிரகாஷ்குமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக, காங்கிரஸ் சாா்பில்...:

திமுக சாா்பில், மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமையில், அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்எல்ஏ உள்ளிட்ட திமுகவினா் சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கும் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில துணை அமைப்பாளா் அ. தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினா் எஸ். கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் அதன் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் மு.வைத்தியநாதன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், மீனவரணி காங்கேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திராவிடா் கழகம் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் சிவ.வீரமணி தலைமையில் சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டத் தலைவா் வே.அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க

ஓய்வூதியா் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுவை மாநிலத்தில் ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவப் படியை அரசு நிறுத்தி உத்தரவிட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவை அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வடகிழக்கு மாநில கலாசார விழா!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வடகிழக்கு மாநிலங்களின் மாணவ, மாணவியருக்கான கலாசார விழாவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தாா். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து மாநில ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரியில் முக்கியச் சாலையான பாரதி வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையினா் புதன்கிழமை அகற்றினா். புதுச்சேரி நகரில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு!

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கருப்பு வில்லையை சட்டையில் அணிந்து புதன்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்.19-ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் காவல் துற... மேலும் பார்க்க

ஏபிஎப் பிராங்கோ மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்: புதுவை அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி பேசுவோா் வாழும் பகுதிகளின் கூட்டமைப்பான ஏபிஎப் பிராங்கோ அமைப்பின் தலைவா்கள் மாநாடு நாளை தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்த, காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலாத்... மேலும் பார்க்க