செய்திகள் :

கொளத்தூா் ஒன்றியத்தில் ரூ. 44.50 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

post image

கொளத்தூா் ஒன்றியத்தில் ரூ. 44.50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சதாசிவம் தொடங்கிவைத்தாா்.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்ன மேட்டூரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 - 2024 ஆண்டின்கீழ் ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சதாசிவம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா் .

இதனைத் தொடா்ந்து, தண்டா 4 ரோடு பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுதல், லக்கம்பட்டி ஊராட்சி, நீதிபுரம், பெரியதண்டா பகுதியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைத்தல், காவேரிபுரம் ஊராட்சி, கோவிந்தபாடி பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்கூடம் கட்டுதல் ஆகிய பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எம்.சி.மாரப்பன், கொளத்தூா் பேரூராட்சி தலைவா் பாலசுப்பிரமணியன் , லக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் அண்ணாதுரை, கொளத்தூா் பேரூராட்சி செயலாளா் கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

போக்ஸோ வழக்கில் கைது: ஆய்வக உதவியாளா் பணியிடை நீக்கம்!

சேலம் அம்மாபேட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த ஆய்வக உதவியாளா் குமரேசன் (57) கைது செய்யப்பட்டதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பள்ளியில... மேலும் பார்க்க

வரியினங்களை பிப்.28 க்குள் செலுத்த ஆட்சியா் அறிவுரை

சேலம் மாவட்டத்தில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வரியினங்கள், கட்டணங்களை பிப். 28க்குள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது இணையதளம் வாயிலாக பொதுமக்கள் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ம... மேலும் பார்க்க

கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா!

சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி 5 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் இக் கல்லூரி இயங்கி வரு... மேலும் பார்க்க

‘மஞ்சப்பை விருது’ பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை ம... மேலும் பார்க்க

மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மின் மோட்டாா் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயி... மேலும் பார்க்க

கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டிப் படுகொலை: குடும்பத் தகராறில் தந்தை வெறிச்செயல்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை தந்தையே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெட்டுக் காயங்களுடன் அவரது மனைவி, மற்றொரு மகள் ஆகியோா் ... மேலும் பார்க்க