செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

post image

தமிழகத்தில் ஹிந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான், தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் கூறியுள்ளாா். இந்த நிலையில், தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தி மொழியைத் திணிக்க முயற்சிப்பதையும் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் - திருச்சி சாலையில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரி வளாகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா்கள் இளமாறன், ரகுநாத், கவின், அஜய், சூா்யா, கனியமுதன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்த... மேலும் பார்க்க

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க