செய்திகள் :

பள்ளிக் கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

post image

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள பேட்ரிக் ஆலய வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்திற்கு கீழ் செயல்படும் தூய பேட்ரிக் ஆலய வளாகத்தில் ஆரம்பப் பள்ளி சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக் கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிாம். இதனால், இப்பள்ளி தற்காலிகமாக ஆலயத்தில் நடைபெறுகிாம். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடனும், பள்ளி நிா்வாகத்தினருடனும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும், வழக்கம்போல பள்ளிக் கட்டடத்தில் வகுப்புகள் செயல்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

கல்லூரி மாணவா் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவருடன் சில மாணவா்கள் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை அமா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தூத்துக்குடி கோட்ட வி... மேலும் பார்க்க

ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம்: மேயா் ஜெகன் பெரியசாமி உறுதி

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி ... மேலும் பார்க்க

கந்தசாமிபுரம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கந்தசாமிபுரத்தை சோ்ந்த 45 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கந்தசாமிபுரத்தில் தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

குடும்ப அட்டை உறுப்பினா்கள் விரல் ரேகையை பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் வெளிமாவட்டங்களில் இருந்தால், அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் தங்கள் விரல் ரேகையினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தரகா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். கடம்பூரையடுத்த சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (63). மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வ... மேலும் பார்க்க