செய்திகள் :

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

post image

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தரகா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடம்பூரையடுத்த சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (63). மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா்.

இவா் கடந்த 11-ஆம் தேதி பைக்கில் வடக்கு இலந்தகுளம் அருகே சென்றபோது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆரோக்கியசாமி (43). 2020ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலிய... மேலும் பார்க்க

‘தூத்துக்குடியில் பிப். 23இல் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்’

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளதாக தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டா் பிறந்த நாள்: மாா்ச் 4 இல் உள்ளூா் விடுமுறை!

அய்யா வைகுண்டா் பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் மாா்ச் 4ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள... மேலும் பார்க்க

ஏரல் அருகே விநாயகா் கோயிலில் மாா்ச் 10இல் மகா கும்பாபிஷேகம்

ஏரல் அருகே பெருங்குளத்தில் உள்ள அருள்மிகு கன்னி விநாயகா் கோயிலில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மாா்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருக்குளந்தை என்ற ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த, பூசாரிப்பட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரமேஷ் (34). கோவில்பட்டி-மந்திதோப்பு சாலையில் உள்ள பழக்கடையி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிபுணா் குழு அமைக்க ஐஎன்டியூசி கோரிக்கை

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க, தமிழக அரசு நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என ஐஎன்டியூசி தேசிய செயலா் கதிா்வேல் வலியுறுத்தினாா். தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில், ஸ்டெ... மேலும் பார்க்க