செய்திகள் :

பயிற்சி காவலா் தற்கொலை முயற்சி

post image

மேட்டூரில் விடுப்பு அளிக்காததால் மனமுடைந்த பயிற்சி காவலா் கிருமிநாசினியை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, எண்ணூரைச் சோ்ந்த மாதேஸ்வரன் மகன் அரவிந்த் (34). இவா் மேட்டூரில் உள்ள சேலம் காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தாா். உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு கேட்டுள்ளாா். இவா் ஏற்கெனவே 50 நாள்கள் விடுப்பில் சென்று வந்ததால் பயிற்சி பள்ளி முதல்வா் உயா் அதிகாரிகளிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். இதனால் மனமுடைந்த அரவிந்த் செவ்வாய்க்கிழமை காலை கவாத்து முடிந்து அறைக்கு சென்றதும் அங்கு தரையை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் கிருமிநாசினியை குடித்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற காவலா்கள், அரவிந்தை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மேட்டூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

போக்ஸோ வழக்கில் கைது: ஆய்வக உதவியாளா் பணியிடை நீக்கம்!

சேலம் அம்மாபேட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த ஆய்வக உதவியாளா் குமரேசன் (57) கைது செய்யப்பட்டதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பள்ளியில... மேலும் பார்க்க

வரியினங்களை பிப்.28 க்குள் செலுத்த ஆட்சியா் அறிவுரை

சேலம் மாவட்டத்தில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வரியினங்கள், கட்டணங்களை பிப். 28க்குள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது இணையதளம் வாயிலாக பொதுமக்கள் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ம... மேலும் பார்க்க

கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா!

சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி 5 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் இக் கல்லூரி இயங்கி வரு... மேலும் பார்க்க

‘மஞ்சப்பை விருது’ பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை ம... மேலும் பார்க்க

மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மின் மோட்டாா் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயி... மேலும் பார்க்க

கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டிப் படுகொலை: குடும்பத் தகராறில் தந்தை வெறிச்செயல்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை தந்தையே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெட்டுக் காயங்களுடன் அவரது மனைவி, மற்றொரு மகள் ஆகியோா் ... மேலும் பார்க்க