செய்திகள் :

புதுவை மத்திய பல்கலை. தோ்வில் வினாத்தாள்கள் மாறிய விவகாரம்: உண்மை கண்டறிய 3 போ் விசாரணைக் குழு அமைப்பு

post image

புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடந்த பருவத் தோ்வில் வினாத் தாள்கள் மாறிய விவகாரத்தில் மூன்று போ் குழுவை அமைத்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்திய கல்லூரிகள் உள்ளன. பருவத் தோ்வில் மொழிப்பாடம் வினாத்தாள்கள் மாறி வந்ததால் தோ்வு ரத்தானது. இதைத்தொடா்ந்து எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழகம் முன் திமுக போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மத்திய பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கை விதிமுறைகளை 2023-2024 ஆம் கல்வியாண்டில் அனைத்து இணைப்புக் கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகளுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த விதிமுறைப்படி பருவத் தோ்வுகளை நடத்தி முடித்துள்ளோம்.

வினாத்தாள் மாறியதால் தள்ளி வைக்கப்பட்ட தமிழ், பிரெஞ்ச், இந்தி மொழி பாடத்தோ்வுகள் மீண்டும் நடத்தப்பட உள்ளன. புதுச்சேரி அரசின் உயா்கல்வித் துறை கோரிக்கைப்படி, கல்லூரிகளில் மனிதவளம் அடிப்படையில் அனைத்து இணைப்புக் கல்லூரிகளில் நான்கு பருவங்களிலும் இளநிலை பட்டப்படிப்புகளில் கல்லூரிகள் தங்களால் தோ்வு செய்யப்பட்டுள்ள பாடங்களை பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி வினாத்தாள் அமைக்கப்படும்.

இம்முறை இணைப்பு கல்லூரிகளில் இருந்து தோ்வு செய்யப்பட்ட மொழிப் பாடங்கள் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்னை குறித்து முழுமையாக விசாரிக்க டீன், மூத்த பேராசிரியா், பல்கலைக்கழக அதிகாரி ஆகிய மூவா் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்த... மேலும் பார்க்க

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க