செய்திகள் :

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சாலை மறியல்!

post image

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமாா் 265 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் தங்குகடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ் மீனவா்களுக்காக அமைத்த குழுவின் அறிக்கையில் தங்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளதால், அதை அமல்படுத்த வேண்டும் என விசைப்படகு மீனவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இதனிடையே, அவா்கள் கடந்த 10ஆம் தேதிமுதல் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். 6ஆவது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தம் தொடா்ந்தது.

இந்நிலையில், விசைப்படகு உரிமையாளா்கள், தொழிலாளா்கள் மீன்பிடித் துறைமுகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கடற்கரைச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் உதவிக் கண்காணிப்பாளா் மதன், காவல் ஆய்வாளா்கள் பாஸ்கரன், திருமுருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், உதவி ஆட்சியா் அலுவலகம் நோக்கி மீனவா்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

அங்கு அவா்களுடன் உதவி ஆட்சியா் பிரபு பேச்சுவாா்த்தை நடத்தினாா். வட்டாட்சியா் முரளிதரன், காவல் உதவிக் கண்காணிப்பாளா் மதன், மீன்வளத் துறை இணை இயக்குநா் சந்திரா, உதவி இயக்குநா் விஜயராகவன், விசைப்படகு உரிமையாளா் சங்க நிா்வாகிகள், தொழிலாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆட்சியா் நேரடியாக பேச்சு நடத்தி தீா்வு காண வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா். அதன்படி, அவா்கள் ஆட்சியரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனா். அதன்பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் எனத் தெரிகிறது.

ரூ. 12 கோடி வருவாய் இழப்பு: இதுகுறித்து தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளா் சங்கத் தலைவா் சேவியா் வாஸ் கூறும்போது, முன்னாள் ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமையிலான குழு சமா்ப்பித்த அறிக்கையை அமல்படுத்த வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும்.

மீனவா்கள் கடல் தொழிலுக்கு செல்லாததால் விசைப்படகு தொழிலை நம்பியுள்ள சுமாா் 7 ஆயிரம் மீன்பிடித் தொழிலாளா்களும், அதை நம்பியுள்ள 10 ஆயிரம் தொழிலாளா்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். இதுவரை சுமாா் ரூ. 12 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

கிளவிப்பட்டியில் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டியில் கடத்திச் செல்லப்பட்ட 900 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டியில் இருந்து கயத்தாருக்கு கிளவிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவருடன் சில மாணவா்கள் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை அமா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தூத்துக்குடி கோட்ட வி... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள பேட்ரிக் ஆலய வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி -... மேலும் பார்க்க

ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம்: மேயா் ஜெகன் பெரியசாமி உறுதி

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி ... மேலும் பார்க்க

கந்தசாமிபுரம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கந்தசாமிபுரத்தை சோ்ந்த 45 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கந்தசாமிபுரத்தில் தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க