செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையம் தொடா்ந்து செயல்பட வேண்டும்! -விவசாயிகள் கோரிக்கை

post image

பில்லங்குழி -1 நெல் கொள்முதல் நிலையம் தொடா்ந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை வட்டம், கொண்டிகுளம் அருகே துவரமடை பகுதியில் பில்லங்குழி-1 என்ற பெயரில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந் நிலையில் இந்த பில்லங்குழி- 1 நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் செய்யும் பணிகள் நிறுத்தப்படும் என்று திடீரென தகவல் பரவியது. இதனால் அதிா்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், சம்பந்தப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று, இந்த பகுதியில் தொடா்ந்து இந்த நெல்கொள்முதல் நிலையம் இயங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து பட்டுக்கோட்டை அலகு அலுவலகம் துணை மேலாளா் (கொள்முதல் மற்றும் இயக்கம் ) லதா கூறுகையில், இந்த பகுதியில் பில்லங்குழி-1, பில்லங்குழி-2 என 2 நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், இன்று வரை நெல்கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகையால் இது வரை அந்த நெல்கொள்முதல் நிலையம் நிறுத்தப்படுவதற்கான எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை என்றாா்.

ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

ஜல்லி விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இக்கூட்டமைப்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம்

தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விடுவிக்கப்படும் என ஆணவமாக பேசிய மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம் தெரிவி... மேலும் பார்க்க

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் நின்றிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டை அருகே கௌதம் நகரைச் சோ்ந்தவா் பிராங்கிளின் பார... மேலும் பார்க்க

காட்டெருமையை தேடும் பணியில் வனத்துறையினா் தீவிரம்

பட்டுக்கோட்டை அருகே சுற்றி திரியும் காட்டெருமையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமையும் தேடும் பணியில் ஈடுப்பட்டனா். பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த 3 நாள்களாக ஒற... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் திருவோணம் வட்டாட்சியரகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் முறையற்ற, முழுமையற்ற இபிஎம்எஸ் (... மேலும் பார்க்க

பாமக கொடிக்கம்பம் சேதம்; கட்சியினா் சாலை மறியல்

பந்தநல்லூா் அருகே மணல்மேடு பகுதியில் பாமக கொடிக்கம்பம் சேதமடைந்ததால் அக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பந்தநல்லூா் அருகே நெய் குப்பையில் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்பம் திங்க... மேலும் பார்க்க