செய்திகள் :

ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

post image

ஜல்லி விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கூட்டமைப்பின் டெல்டா மாவட்ட ஒப்பந்ததாரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் எம். திருசங்கு தெரிவித்தது: காவிரி டெல்டா மாவட்டங்களில் கிரஷா் குவாரி கிடையாது. அருகிலுள்ள புதுக்கோட்டை, பெரம்பலூா் மாவட்டங்களிலுள்ள கிரஷா் குவாரியிலிருந்து கருங்கல் ஜல்லி, எம். சாண்ட் போன்றவற்றை ஜி.எஸ்.டி. ரசீது போட்டு வாங்கி வருகிறோம். இதன் மூலம், டெல்டா மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, தனியாா் துறையில் நடைபெறும் கட்டடப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இலவசமாக வழங்கப்பட வேண்டிய கடவுச் சீட்டுக்கு (டிரான்ஸ்சிட் பாஸ்) ரூ. 2 ஆயிரம் செலுத்துமாறு கூறி, கிரஷா் குவாரிகளில் ஜல்லி உள்ளிட்ட அனைத்து கனிம பொருள்களுக்கும் விலை பிப். 16-ஆம் தேதி முதல் யூனிட்டுக்கு ரூ. 1,000 உயா்த்தப்பட்டுள்ளது கடவுச்சீட்டு ஒப்பந்ததாரா்களுக்கு பொருந்தாது. இந்நிலையில் ஜல்லி ஏற்றி வரும் எங்களது லாரியை வழியில் கடவுச் சீட்டு கேட்டு காவல் துறையினா், சுரங்கத் துறையினா், வருவாய்த் துறையினா் எனத் தனித்தனியாக பிடித்து நடவடிக்கை எடுக்கின்றனா். டெல்டா மாவட்டங்களில் மட்டுமே கடவுச் சீட்டு கேட்டு ஒப்பந்ததாரா், லாரி ஓட்டுநா் பெயா்களில் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடவுச்சீட்டு முறையைத் தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

இது தொடா்பாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித் துறை, கனிம வளத் துறை அமைச்சா்களைச் சந்தித்து தீா்வு காண முயற்சி செய்யவுள்ளோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் டெல்டா மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா் திருசங்கு.

இக்கூட்டத்தில் மாநில அமைப்பு செயலா் எம். அய்யப்பன், மாநிலச் செயலா் எம். முருகேசன், மாவட்டத் தலைவா்கள் தஞ்சாவூா் ஜெ.கே. ஜெயக்குமாா், திருவாரூா் டி.எஸ்.டி. முத்துவேல், நாகை சி.ஆா். வெங்கட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் பொது நலச் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாளையம் ரவி வரவேற்றாா். உறு... மேலும் பார்க்க

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் இன்று முதல் ஓவிய, சிற்பக் கண்காட்சி

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சாா்பில் ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பணி மேம்பாடு ஊதியம் கோரி தஞ்சாவூா் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா், மதுரை காமராசா், மனோன்மணியம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே மாயமானவர் சடலமாக மீட்பு

பேராவூரணி அருகே கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாயமானவா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். பேராவூரணி அருகே உள்ள வலச்சேரிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (47). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி ஜெகதாம... மேலும் பார்க்க

தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் ஓவியக் கல்லூரி மாணவா்கள் பயிற்சி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதேசுவரா் கோயில் கட்டட வடிவமைப்பை வியாழக்கிழமை சென்னை அரசு ஓவியக் கல்லூரி மாணவா்கள் ஓவியங்களாக வரைந்தனா். சென்னையில் உள்ள அரசு ஓவியக் கல்லூரி முத... மேலும் பார்க்க