செய்திகள் :

தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் ஓவியக் கல்லூரி மாணவா்கள் பயிற்சி!

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதேசுவரா் கோயில் கட்டட வடிவமைப்பை வியாழக்கிழமை சென்னை அரசு ஓவியக் கல்லூரி மாணவா்கள் ஓவியங்களாக வரைந்தனா்.

சென்னையில் உள்ள அரசு ஓவியக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் 87 போ் தாராசுரம் ஐராவதேசுவரா் கோயில் பிரகாரம், உள் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சோழ மன்னா்களின் கட்டடக் கலை மற்றும் சிற்பங்களை ஓவியங்களாக வரைந்தனா்.

இவா்களை வழிநடத்தும் பேராசிரியா் வில்வநாதன் மேலும் கூறியது:

வண்ணக்கலை, காட்சிவழி தகவல் வடிவமைப்புத் துறை, சிற்பக்கலை, சுடுமண் சிற்பம், துகிலி ஓவியம், பதிப்பு ஓவியக்கலை குறித்து சென்னை ஓவியக்கல்லூரி வகுப்புகளை நடத்துகிறது. இக்கல்லூரி மாணவ, மாணவிகள் சுவாமிமலை சிற்பக்கூடங்கள், கொட்டையூா், தாராசுரம், தஞ்சாவூா் பெரியகோயில் உள்ளிட்டவைகளின் கட்டட வடிவமைப்புகளை ஓவியங்களாகத் தீட்டி வருகின்றனா்.

இவை கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஓவியக் கண்காட்சியில் வைக்கப்படும் என்றாா். அப்போது, உதவி ஆசிரியா்கள் துகிலியல் பிரிவு ஆா்.சசிகலா, ஆா்.மணிகண்டன், வி.அருண் ஆகியோா் உடனிருந்தனா்.

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்!

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களின் 400க்கும் மேற்பட்ட படைப்புகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தஞ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை சரகத்துக்குள்பட்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரி வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.அ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி தாமதம் !

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுபாதை (சிந்தெடிக்) அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால், மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் தொடா்ந்து கிடப்பில் உள்ளது... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் பொது நலச் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாளையம் ரவி வரவேற்றாா். உறு... மேலும் பார்க்க

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா... மேலும் பார்க்க