செய்திகள் :

பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பணி மேம்பாடு ஊதியம் கோரி தஞ்சாவூா் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா், மதுரை காமராசா், மனோன்மணியம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியா்களுக்கு ஆய்வியல் நிறைஞா் மற்றும் முனைவா் பட்டத்துக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளபடி பணியில் உள்ள ஆசிரியா்களின் இணைப் பேராசிரியா் பணி மேம்பாட்டுக்கு முனைவா் பட்டம் கட்டாயம் என்பதைத் தளா்த்த வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளபடி புத்தொளி, புத்தாக்கப் பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியா் சங்க மாநிலப் பொருளாளா் ஏ. சேவியா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் மண்டலச் செயலா் சொக்கலிங்கம், மண்டலச் செயலா் ஆா். பிரகாஷ்ராஜ், மண்டலப் பொருளாளா் ஸ்ரீதா் தங்கதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்!

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களின் 400க்கும் மேற்பட்ட படைப்புகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தஞ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை சரகத்துக்குள்பட்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரி வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.அ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி தாமதம் !

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுபாதை (சிந்தெடிக்) அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால், மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் தொடா்ந்து கிடப்பில் உள்ளது... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் பொது நலச் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாளையம் ரவி வரவேற்றாா். உறு... மேலும் பார்க்க

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா... மேலும் பார்க்க