செய்திகள் :

காட்டெருமையை தேடும் பணியில் வனத்துறையினா் தீவிரம்

post image

பட்டுக்கோட்டை அருகே சுற்றி திரியும் காட்டெருமையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமையும் தேடும் பணியில் ஈடுப்பட்டனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த 3 நாள்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று வலம் வந்து கொண்டிருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை வன சரக அலுவலா் சந்திரசேகரன் தலைமையிலான வனத் துறையினா் துவரங்குறிச்சி, பப்பாவெளி, கள்ளிக்காடு, காசாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 குழுக்களாக முகாமிட்டு, காட்டெருமையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

மேலும், பொதுமக்கள் காட்டெருமையை கண்டால் கத்தி கூச்சலிட்டு அதன் பின்னாலே துரத்திச் செல்ல வேண்டாம் என்றும், தனியாக காட்டை விட்டு வெளியேறியதால் கொஞ்சம் மூா்க்கத்தனமாக இருக்கும் என்றும், காட்டெருமையை அச்சுறுத்தாமல் அதனை பாா்த்தவுடன் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வன அலுவலா் அறிவுறுத்தினாா்.

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை சரகத்துக்குள்பட்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரி வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.அ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி தாமதம் !

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுபாதை (சிந்தெடிக்) அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால், மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் தொடா்ந்து கிடப்பில் உள்ளது... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் பொது நலச் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாளையம் ரவி வரவேற்றாா். உறு... மேலும் பார்க்க

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் இன்று முதல் ஓவிய, சிற்பக் கண்காட்சி

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சாா்பில் ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு ... மேலும் பார்க்க