செய்திகள் :

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்திவைப்பு

post image

கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் ஊராட்சியில், சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பிப்.21-இல் நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொள்ளப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் அறிவித்திருந்தாா்.

இதுதொடா்பாக, கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னா், பி.ஆா். பாண்டியன் தெரிவித்தது:

கரையாபாலையூா் ஊராட்சியில் 140 ஏக்கரில் சிப்காட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு அனுமதிக்க மாட்டோம்.

வடபாதிமங்கலம் ஆரூரான் சா்க்கரை ஆலைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் 50 ஆண்டுகளாக தரிசாக கிடக்கின்றன. அதைக்கைப்பற்றி சிப்காட் அமைக்க வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். தருமபுரம் ஆதீனம் நிலங்களை விற்பனை செய்வதை அனுமதிக்கக் கூடாது என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பேச்சுவாா்த்தையில், தருமபுரம் ஆதீனத்துக்கு செலுத்த வேண்டிய குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தி, உரிய குத்தகைப் பதிவை சாகுபடிதாரா்களுக்கு உறுதிப்படுத்துவது; அதற்கான முத்தரப்பு கூட்டத்தை நடத்தி முடிவெடுப்பது என ஆதீனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிப்காட் அமைக்க எதிா்ப்புக்கான காரணங்கள் குறித்து அரசுக்கு எடுத்துரைப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்தாா். இதை ஏற்று, நீதி கேட்கும் நெடும் பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா்.

முன்னதாக, திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சௌம்யா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் முன்னிலையில் இறுதி செய்யப்பட்டது.

பேச்சுவாா்த்தையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சரவணன், மாவட்ட பொருளாளா் நடராஜன், நிா்வாகிகள் சரவணன், அண்ணாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவு

வலங்கைமானில் தவணைத்தொகை செலுத்தாததால், வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. வலங்கைமான் தொழுவூா் மேலத் தெரு... மேலும் பார்க்க

5 நெல் கொள்முதல் நிலையங்கள், நவீன சேமிப்பு தளம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

திருவாரூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், மன்னாா்குடி அருகே மூவாநல்லூரில் நவீன சேமிப்பு தளத்தையும் காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தி... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறையில் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊ... மேலும் பார்க்க

உலக இசை தின விழா

திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில், கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் உலக இசை தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், நாகசுரம் செயல்முறை விளக்கம், வயலின் இசை நிகழ்ச்ச... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை மாணவ- மாணவிகளுடன் அமா்ந்து சாப்பிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன். மன்னாா்... மேலும் பார்க்க

கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம் தொடக்கம்

மன்னாா்குடியில் முகாமை தொடங்கிவைத்து, பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். மன்னாா்குடி, பிப். 20: மன்னாா்குடி கால்நடை மருத்துவமனையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் (2024-2025... மேலும் பார்க்க