செய்திகள் :

`நட்பு காதலாக மாறி..!’ - சுஷ்மிதா சென் உடனான உறவு முறிவு; புதிய காதலியை அறிமுகம் செய்த லலித் மோடி

post image

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் லலித் மோடி. அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வெளியேறி இப்போது லண்டனில் வசிக்கிறார். லலித் மோடி கடந்த 2022ம் ஆண்டு திடீரென தனது சோசியல் மீடியாவில் தான் நடிகை சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறி இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார். அதோடு தன்னில் பாதி என்று சுஷ்மிதா சென்னை லலித் மோடி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதன் பிறகு அவர்களது உறவு என்ன ஆனது என்று தெரியவில்லை. இருவரும் இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேசமயம் சுஷ்மிதா சென் தனது பழைய காதலன் ரோஹ்மன் என்பவருடன் வெளியிடங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். இப்போது சுஷ்மிதா சென்னை கைவிட்டுவிட்டு புதிய பெண்ணை லலித் மோடி காதலிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புதிய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரிமா பெளரி என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்களது 25 ஆண்டு நட்பு காதலாக மாறி இருப்பதாக லலித் மோடி குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``எனக்கு இரண்டுமுறை அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. 25 ஆண்டு நட்பு காதலாக மாறும்போது அது நடந்திருக்கிறது. இது இரண்டு முறை நடந்திருக்கிறது. இது உங்கள் அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார். முதல் அதிர்ஷ்டம் என்று அவர் சொல்வது சுஷ்மிதா சென்னை காதலித்ததை சொல்வதாக தெரிகிறது.

லலித் மோடி காதலிக்கும் பெண் லெபனானை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்தியாவை விட்டு வெளியேறிய லலித்மோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்து இருக்கிறது. 2018ம் ஆண்டு லலித் மோடியின் மனைவி மினால் காலமாகிவிட்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

டெல்லி: அடுத்தடுத்து வந்த 100 பீட்ஸாக்கள்; எல்லாம் கேஷ் ஆன் டெலிவரி! - Ex லவ்வரை அதிர வைத்த பெண்

காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவா... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு டு ஆர்.சி.பி நியூ கேப்டன் - இந்த வார கேள்விகள்

த.வெ.க தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் பாதுகாப்பு, பி.எஸ்.என்.எல் (BSNL) லாபம், குடியரசுத் தலைவர் ஆட்சி, அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா, ஆர்.சி.பி அணிக்குப் புதிய கேப்டன் நியமனம் என இந்த வார சம்பவ... மேலும் பார்க்க

இத்தாலிக்குத் தத்து போனவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய கதை... தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்தவர் உத்தாண்டபிள்ளை. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே இவருடைய மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இவருக்குப் பாலமுருகன் என்ற... மேலும் பார்க்க

Dhoni: "என் காதல் தீராமல் சேமித்தேனே என் ஆழ்மனம் நீயாக..." - தோனி, சாக்‌ஷி க்ளிக்ஸ் | Photo Album

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!https://tinyurl.com/Velpari-Vikatan-Play மேலும் பார்க்க

`பேபி, இனி உலகம் முழுவதும் பறக்கலாம்.!’ - சிறையில் இருந்தும் ஜாக்குலினுக்கு விமானம் பரிசளித்த சுகேஷ்

டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களிடம் தான் அரசு அதிகாரி, அமைச்சருக்கு வேண்டப்பட்டவர் என்று கூறி மோசடி செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டு டெல... மேலும் பார்க்க

Allahbadia: போன் ஸ்விட்ச் ஆப், வீட்டிற்குப் பூட்டு, தேடும் போலீஸ்.. யூடியூப்பர் அல்லாபாடியா தலைமறைவு

யூடியூப்பர் அல்லாபாடியா மற்றும் அபூர்வா மகிஜா ஆகியோர் நடத்திய 'India's Got Latent' என்ற ரியாலிட்டி ஷோவில் அல்லாபாடியா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. மும்பை மற்றும் அஸ்ஸாம் போலீஸார் இது தொடர்பாக அல்லா... மேலும் பார்க்க