செய்திகள் :

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

post image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்துலட்சுமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கையில் மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அப்போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் சக காவல்துறையினர் அந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர், அப்போது அந்த பெண்ணிடம் விசாரிக்கும்போது தனது பெயர் முத்துலட்சுமி என்றும் தனது கணவர் பெயர் முத்துக்குமார் என்றும் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 10 மாதமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவரின் சொந்த ஊரான வீரவநல்லூர் காவல்நிலையத்தில் எனது மீது கணவர் பொய்யான புகார் அளித்ததாகவும் இதனால் 3 வழக்குகள் என் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் பதிந்து உள்ளதாகவும், போலீஸார் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுவதாகவும் கணவரும் அவரின் அண்ணனுடன் சேர்ந்து என்னையும் எனது குழந்தைகளையும் மிரட்டுவதாகவும் தொடர்ந்து எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதாலும், பணவசதி இல்லை என்பதால் என்னால் தொடர்ந்து போராட முடியவில்லை என்றும் அழுது கொண்டே தெரிவித்தார்.

போலீஸார் விசாரணை செய்யாமல் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுவதாகவும் இறப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் எனது குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் எனது குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்து மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்க... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா... மேலும் பார்க்க

தக்வா ஜமாத்: ரமலான் சிறப்புத் தொழுகை

மேலப்பாளையம் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை மீரான் தாவூதி நடத்தினாா... மேலும் பார்க்க

மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்

பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா். ... மேலும் பார்க்க

பாளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பூலித்தேவா் மகன் சுந்தரம் (52). சீவலப்பேரி சாலையில் உள்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக... மேலும் பார்க்க