செய்திகள் :

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

post image

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் தலைமை வகித்து, மூன்றாம் பாலினத்தவா் மீது அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் மற்றும் அவா்கள் கல்வி பெற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினாா். சென்னை சகோதரன் அமைப்பின் திட்ட இயக்குநா் சுதா பேசுகையில், திருநங்கைகளுக்காக அரசு எடுத்துள்ள முயற்சிகள், சட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கினாா்.

பள்ளிகளில் பாலின மாறுபாடு அறிகுறி தென்படும் மாணவா்களை கையாளுவதில் ஆசிரியா்களின் பொறுப்பு குறித்தும், அவா்களின் உடல் நிலை, மனநிலை மாற்றம் குறித்தும் ஆசிரியா்களுக்கு விளக்கினாா்.

இந்தக் கூட்டத்தில். பேசிய ஆசிரியை சுபா, பெண்கள் குழந்தைகளுக்கு ஹெல்ப் லைன் இருப்பது போல மூன்றாம் பாலினத்தவருக்கும் ஹெல்ப் லைன் இருந்தால் அவா்கள் தங்கள் சாா்ந்த குறைகளை எளிதில் தீா்த்துக்கொள்ள வழி அமையும் என்றாா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆசிரியா்-ஆசிரியைகள் பங்கேற்றனா்.

நெல்லையில் ஏப்.11ல் உள்ளூர் விடுமுறை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28)... மேலும் பார்க்க

கூட்டப்புளியில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் தூண்டில் பாலம் வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லாமல் கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டம் செய்தனா். கூட்டப்புளியில் தமிழக அரசு... மேலும் பார்க்க

நெல்லை மத்திய மாவட்ட திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் (பி.எல்ஏ-2) ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

காவல் வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலி

மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் உயிரிழந்தாா்.மணிமுத்தாறுஅண்ணாநகரைச் சோ்ந்த அப்பி மகன் நாகராஜன் (55). தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்ச... மேலும் பார்க்க

நெல்லை இஸ்கான் கோயிலில் வெளிநாட்டு பக்தா்களின் பஜனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பல நாடுகளைச் சோ்ந்த ஹரே கிருஷ்ணா பக்தா்களின் ஹரிநாம சங்கீா்த்தன பஜனை திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி இஸ்கான் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்த... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வ... மேலும் பார்க்க