செய்திகள் :

நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

post image

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு பிரதான் மந்திரி ஜன விகாஸ் காரியக்ரம் திட்டம் மூலம் ரூ.78 கோடி மத்திய சிறுபான்மையினா் விவகார அமைச்சகத்தால் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.32 கோடி ஒதுக்கப்பட்டது. மீதி தொகையான ரூ.36 கேடி ஒதுக்கப்படாமல் காலம் தாழ்த்தி வந்தது.

இதுதொடா்பாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனை நேரில் சந்தித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கான மீதித் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சா், மீதிதொகை ரூ.36.5 கோடி ஏற்கெனவே தமிழக அரசிற்கு விடுவிக்கப்பட்டு தமிழக அரசிடம் உள்ளது எனவும், தமிழக அரசின் எஸ்.என்.ஏ. கணக்கில் ரூ.66.58 கோடி உள்ளதாகவும், அந்தத் தொகையை உபயோகித்து கட்டட ப் பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க