பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி கிராமத்தில் உள்ள 12 ஏக்கர் பரப்பை 2 ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அழகர்கோவில் வனச்சரகத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கலாக்காய், சிறிய ஆமணக்கு உள்பட 22 வகையான புதர் செடிகள்,
அழிஞ்சி, இரும்புளி, பூந்திக்கொட்டை மரம் உள்பட 48 வகையான மரவகை,
ஓணான்கொடி, ஓடான் கோடி, வக்கனத்தி உள்பட 21 வகையான கொடிகளும்,
சிறுகுறுஞ்சான், நன்னாரி, ஓரிதழ் தாமரை உள்பட 29 வகையான குறுஞ்செடிகள் உள்ளன.
மேலும், வால்காக்கை, நீலத் தொண்டை ஈ பிடிப்பான், தேன் சிட்டு உள்பட 12 வகையான பறவை இனங்கள், சிறிய அளவிலான பாலூட்டி விலங்குகள், ஊர்வன, பூச்சிகளின் வாழ்விடமாக உள்ளது.
தற்போது அரசு பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் பல வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வனத்துறைச் செயலரான சுப்ரியா சாகு, எக்ஸ் பக்கத்தில், "காசம்பட்டி பல்லுயிர் தளத்தின் மூலம் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைவார்கள். பறவைகள், பூச்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடக்கும். மண்வளம் மேம்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs