செய்திகள் :

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு; கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி தமிழக விவசாயிகள் போராட்டம்!

post image

தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக பலமுறை நிபுணர் குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை

இருப்பினும் அணையை இடிக்க வேண்டும், அணைக்கு அருகே புதிய அணை கட்ட வேண்டும் எனக் கூறி முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு அமைப்பினர் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2022-ல் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதங்களுக்குள் முல்லைப்பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 2024 அக்டோபர் 1 முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டன.

விவசாய சங்கத்தினர் போராட்டம்

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கித் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு தார்பில் கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் பிரியேஸ் மற்றும் 2 தொழில்நுட்ப வல்லநுர்கள் உள்ளனர்.

இக்குழுவில் கேரள அரசு சார்பில் உள்ள 2 அதிகாரிகளை நீக்க வலியுறுத்தி, பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்டம் குமுளியில் உள்ள மாநில எல்லையை முற்றுகையிட முயன்றனர். இதற்காக கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேரள எல்லையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

போராட்டம்

அவர்களை லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் முன்பாக இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் குமுளி மலைச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் - டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந... மேலும் பார்க்க

Garlic: ரூ.600-லிருந்து 60-க்கு சரிந்த ஊட்டி மலை பூண்டு - காரணம் இதுதான்!

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு பயிர்களுக்கு அடுத்தபடியாக பூண்டு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும்... மேலும் பார்க்க

LIVE TN Budget 2025-26 : வேளான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் MRK பன்னீர் செல்வம்!

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!MRK பன்னீர் செல்வம்தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பிரபலமாகும் `வாடகை கோழி சேவை' - என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவில் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்ப்பது என்பது பிரபலமாகி வருகிறது. ஏன் மக்கள் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.ம... மேலும் பார்க்க

Amul: "நெய், தயிரைத் தொடர்ந்து விரைவில் தமிழ்நாட்டில் பால் விற்பனை" - அமுல் நிறுவன எம்.டி பேட்டி

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2025, திருச்சி மாநகரில் உள்ள கலையரங்கத்தில் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த மாபெரும் வேளாண் கண்காட்சிக்கு சத்யம் அக்ரோ கிளினிக் மற்... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

வாசக விவசாயிகளே!விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது... மேலும் பார்க்க